Tuesday, May 6, 2008

முத்தம்....

இரு இதயங்களில் கைக்குலுக்கல்
நம் முதல் முத்தம்!

ஒரே நேரத்தில் என்னுள் உயிரணுக்கள்
ஒவ்வொன்றையும் உயிர்ப்பிப்பது உன் முத்தம்,

ஒவ்வொரு முறையும்
நம் ஊடலின் முடிவுரை நம் முத்தம்,

காதல் மழையின் முதல் துளி
கூடலின் முகவுரை நம் முத்தம்....

உணர்ந்தேன் காதலின்
வல்லினம் உன் முத்தத்தில்...

உணர்த்தினேன் காமத்தின்
மெல்லினம் என் முத்தத்தில்...

உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,
உதடுகளின் ஸ்பரிசத்தில்...முத்தம்....இல்லை முக்தி!!