Thursday, July 10, 2008

நீயே என் கவிதை....

உன் கவிதைகளை நான்
எடுத்து சேகரித்தபோதுதான்
தெரிந்து கொண்டேன்
ஒவ்வொரு கவிதையிலும்
நானிருக்கிறேன் என்ற உண்மையை

உன் காதல் கவிப் புத்தகத்தை
என் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டேன்
என் நெஞ்சின் நேசம்
உன் கவிதைகளுக்காவது
புரியட்டுமென்று..


என்னை கவிதை
எழுத வைத்தது மட்டுமல்ல
கவிதையாய்
என்னை அழகாக்கியதும்
நீதான்..

என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்க்கு
காட்டிக் கொடுக்கிறது
உன்னை நான் கவிதையாய்
காதலிப்பதை

எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்...நான்
வெக்கப்பட்டு கவிதைகளை
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்

என்னவனே!
எப்படி என் கவிதைக்குள்
ஏதேனும்
ஒரு வார்த்தையின் வடிவில்
ரகசியமாய் வந்தமர
கற்றுக் கொண்டாய்?


உன்னைத் தவிர
எனக்கு எதுவும்
தெரிவதில்லை
இரு வரியானலும்
அதன் கரு நீயாக
இருக்கும் என் கவிதைபோல

வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக...

Monday, June 30, 2008

கோபத்திற்கு நிறம் உண்டா???

உன் ஆசையை காட்டுவதற்காக
இப்படியா
வார வாரம் என்னிடம் கோபம் பட்டு
பேசாமல் இருக்கிறாய்
சில தினங்கள்

உன் கோபங்களை விதைப்பதற்கு
என் மனதா கிடைத்தது
பாவம் அது வளர
என் கண்ணீரைக் கடன்
கேட்கிறது

உன் ஆண்மையை என்னிடம்
காட்ட விரும்புகிறாய் என்றால்
சொல்லியிருக்கலாமே
அதைவிட்டு என் மேல்
அடிக்கடி கோவித்துக் காட்டுகிறாய்

ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது
ஆனால்
என் மீது கோபப்படும்
போதுதான் உன் ஆசைகள்
எல்லாம் புரிகிறது...

உன் நிறம் எனக்கு
பிடித்திருக்கும் போது
உன் கோபத்தின்
நிறம் மட்டும்
பிடிக்காமலா போய்விடும்???

Tuesday, May 6, 2008

முத்தம்....

இரு இதயங்களில் கைக்குலுக்கல்
நம் முதல் முத்தம்!

ஒரே நேரத்தில் என்னுள் உயிரணுக்கள்
ஒவ்வொன்றையும் உயிர்ப்பிப்பது உன் முத்தம்,

ஒவ்வொரு முறையும்
நம் ஊடலின் முடிவுரை நம் முத்தம்,

காதல் மழையின் முதல் துளி
கூடலின் முகவுரை நம் முத்தம்....

உணர்ந்தேன் காதலின்
வல்லினம் உன் முத்தத்தில்...

உணர்த்தினேன் காமத்தின்
மெல்லினம் என் முத்தத்தில்...

உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,
உதடுகளின் ஸ்பரிசத்தில்...முத்தம்....இல்லை முக்தி!!

Thursday, April 10, 2008

நிலவுக்கு வெட்கம்....

சமயலறையில் நான்...
நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,
'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...
ச்மைத்[ந்]தது' நான்..
'விருந்து' நம்மிருவருக்கும்!!

நிலவொளியில்
மொட்டை மாடியில்
முழுவதுமாய் உன் பிடியில்
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்...
நிலவும் வெட்கத்தில்
மேகத்திற்குள் மறைந்துக்கொண்டது!!

நீ
டீஷர்ட் போட்டால்
ஜீன்ஸ் போடு,
ஜீன்ஸ் போட்டால்,
ஷு போட மறக்காதே...
நான்
சொன்னபடியெல்லாம் கேட்டாய்,
துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்????

'கள்ளி உன்னை
கிள்ள வேண்டும்போல்' இருக்கிறது என்றாய்,
'கண்ணா உன்னை
கடிக்க வேண்டும்போல் 'இருக்கிறது என்றேன் பதிலாய்,
கிள்ளுகளும், செல்ல கடிகளும்
காதலோடு காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!

Monday, April 7, 2008

தொடக்கமான முடிவு....நீ

என்னை...

மீட்டெடுத்ததும் நீ
கட்டுபடுத்துவதும் நீ...

கண்டிக்கலாம் நீ
காயப்படுத்தலாமா நீ...

விருப்பம் காட்டியது நீ
விஷம் கக்கியதும் நீ....

நெருக்கமான அணல் மூட்டியதும் நீ
நெருப்பு வார்த்தை கொட்டியதும் நீ....

என் முகம் ஏந்தியது நீ
என்னை முழுவதுமாய் எரித்ததும் நீ...

வாழ வழிகாட்டியது நீ
வாழ்வை வெறுக்க வைத்ததும் நீ...

Saturday, April 5, 2008

இதயத்தின் கதறல்....

கடல் தாண்டி போனவள்
கன்னியம் இழந்துவிட்டாளென
எண்ணிவிட்டாயோ??

காற்றாய் உன்னை சுவாசித்தவள்
பேச்சிலும் மூச்சிலும்
உன் நினைவை
சுமந்தவள்....
சுமையாகி போனாளோ????

மனமென்னும் கற்பத்தில்
கருவாய் உன்னை
சுமந்தவளின் உயிரை
கடும் வார்த்தைகளால்
கொல்வது ஏனடா???

சேயை இழந்த தாயாய்
தந்தையை இழந்த மகளாய்
இன்று
துடிக்கிறதே என் இதயம்...
கண்ணீரெனும் மருந்திட்டு ஆற்றிட
கரமொன்றும் இல்லையா??

நியாயமா நீ செய்தது
சிந்தித்துப் பார்
என் இரத்த துளிகளின்
கதறலுக்கு
பதிலேது????

Friday, April 4, 2008

நினைவிருக்கும்வரை.....நிறைந்திருக்கும்!!!

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்கும்!!

பாடாத ராகம் ஆனேன்,
எரியாத தீபம் ஆனேன்,
விடியாத இரவானேன்,
முடியாத கதையானேன்...

என் நிலையை எனக்குணர்த்தி
தன் நிலைக்கு எடுத்துச் சென்றாய்!!

மீட்டாத வீணை ஆனேன்,
எழுதாத கவி ஆனேன்,
இனிப்பில்லா தேன் ஆனேன்,
நிறமில்லா மலர் ஆனேன்....

புதுமை வழியில்
புது தென்றலாய் வீசினாய் என்னில்!!!

நீயும்
உன் அன்பும்
நம் காதலும்.....

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்கும்!!

Thursday, April 3, 2008

நீ பிறந்தது எனற்காக....!!

நோட்டுப்புத்தகத்தையும்...
எழுதுகோலையும்...
திறந்தே வைத்திருக்கிறேன்!

உன் பிறந்தநாள் கவிதைக்காக..

மையும் மனசும்...
கொட்டுவதற்குக் காத்திருக்கிறது...

ஆனால் தெரியவில்லை
எதிலிருந்து ஆரம்பிப்பது?

இமைகளிலிருந்து ஆரம்பிக்கவா...?
இதயத்திலிருந்து ஆரம்பிக்கவா...?

அடிக்கவரும்
அப்பாவிடமிருந்து தப்பித்து..
அம்மாவின் முந்தானைக்குள்
ஒளிந்துகொள்ளும் குழந்தைகளைப்போலவே..
உன் அன்பில்
ஒளிந்துகொண்டு எழுதட்டுமா..?

சோகத்தில் மடியில்
சுருண்டு படுத்திருக்கும்போது...
தலைகோதி விடும்
தாயைப்போலவே..
என்
இதயம் கோதி விடுகின்ற உன்
விமர்சனங்களிலிருந்து சில
வார்த்தைகள் திருடட்டுமா..?

என்ன எழுதுவது..?

ஒரு கவிதை..

வார்த்தைகள் வரவில்லை..
எழுத்துக்கள் எழவில்லை..

ஏன்? ஏன்? ஏன்?

கவிஞருக்குப் போய்
கவிதை எழுதுவதா..?

நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் !!

Tuesday, March 25, 2008

கனவில் உருவான 'நம்' கவிதை...

தூங்காத இரவுகளில்
தூக்கத்தை பறித்த
உன்
நினைவுகள்....
தூங்கும் இரவில்
கனவாக நிறைந்தன..

அந்தக் கனவில்
உருவான 'கவிதை'......

அங்குலம் அங்குலமாய்
வெப்பம் பரவி
அனல் துவங்கி
விரல்கள் மடங்கி
நரம்புகள் நடுங்கி
மேல் பரவி
கொடியிடை வளைந்து நாணலாகி
சலனம் தாண்டி
தேகம் அதிர்ந்து
சன்னமாய் உதித்தது
நம் குழந்தைக்கான ஆயத்தங்கள்....

Friday, March 7, 2008

நம் காதல் காவியம்....

முதல் மடல்..
ஆன்லைனில் முதல் அரட்டை..
என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிய
முதல் ஃபோன்கால்...
நாளொரு மேனியாக நட்பு வளர,
திடிரென காணாமல் போன நட்பை
தேடிய தேடல்...

பின்னொரு நாளில் நட்பு திரும்பிவருகையில்
நீ அடைந்த உவகை...
பிரிவு ஏற்படுத்திய ஏக்கம்
'மீண்டு' மலர்ந்த நட்பை ஆழமாக்க..
ஆழத்தில் நட்பு வேறூண்றியபோதுதான்
காதலை கண்டாய் அங்கு..
'நட்பில் காதலா?' மறுப்புடன் நான்...
உறுதியுடன் நீ!

என்னில் புதைந்திருந்த காதலை
தேடி எனக்குணர்த்த..
என் பிடிவாதங்களை தகர்க்க
நீ பட்ட பாடு..
பிடித்துப் போனது எனக்கு,
உன்னையும் உன் காதலையும்.....
ஏற்றுக்கொண்ட காதலை
கொண்டாடி மகிழ்ந்தாய் சிறுகுழந்தைபோல்,
அக்குழந்தைக்கு நான் பதித்த முதல் முத்தம்
கண்களில் நீர் உனக்கு
கரகரத்தது உன் குரல்....

முத்தம் பதித்த இதழுக்கு நீ பரிசளிக்க
முழுவதுமாய் விழித்துக் கொண்டன
எனக்குள் அனைத்தும்....
'மலர்ந்துக்கொண்டிருக்கிறேன் நான்' என
துடிக்கும் என் உதடுகள் உனக்குணர்த்த
உன் விரல்கள் வேகத்தடைகளை
மீறத்தொடங்கின....
மறுப்புடன் என் சிணுங்கள்
ரசிப்புடன் நீ...
முத்தத்தில் ஆரம்பித்து
மொத்தமாய் கலந்தது
நம் காதல்!!!

Sunday, March 2, 2008

செல்லமாய் கோபித்து...

உன் கவிதை வரிகளில்
நானிருக்கிறேன் என்று தெரிந்தும்
"யாருக்காக" எழுதினாய் என
கோபிப்பதில் ஒரு
இன்பம் எனக்கு ....


"கோபப்படும்போது இன்னும் அழகாகயிருக்கிறாய்"என
நீ சொல்வது பொய்யென்று தெரிந்தும்
ரசிக்கிறதே என் வெட்கம்
என்ன செய்ய நான்?...



இனி உன்னுடன் பேச
போவதில்லை என்ற
என் உதடுகளை
'பேசவே பேசாதே' என
கவ்விக் கொண்டால்
என்ன அர்த்தம்?


என்னைத்தவிர வேறு
எந்தப்பெண்ணிடம் நீ
பேசினாலும்
சண்டையிடத் தோன்றுகிறது
ஆனால் அது....
சந்தேகமில்லா சண்டை
என்பது தெரியுமாடா உனக்கு?

ஏதேனும் ஒரு காரணத்திற்காக
நீ சண்டையிடுவதெல்லாம்
'சங்கமத்தில்' முடிப்பதற்காகதான்
என்பதை சரசத்தில்தான்
உணர்ந்தேன்.....
அது உண்மையா??


'அவனிடம் என்ன அரட்டை?
இவனிடம் என்ன பேச்சு?'
என நீ உரிமையுடன்
கோபித்துக்கொள்ளும் போதெல்லாம்...
"அப்படித்தான் கடலை போடுவேன், உனக்கென்ன" என
வீம்புக்கென்று வம்பிழுத்து
வெறுப்பேத்துவேன் தெரியுமா?....


மழையில் நான் நினைந்தால்
மழை துளியும் என்னை
அக்கோலத்தில் பார்க்க கூடாது என
குடை பிடிப்பாயே.........
உன்னை என்னவென்று சொல்வது???

தொலைவில் நீ
இங்கு
தனிமையில் நான்
கேட்க ஆயிரம் கேள்விகளுடன்....
விடையளிக்காமல்
விடை கொடுத்துவிடாதே.....ப்ளீஸ்!!

Saturday, March 1, 2008

காதலித்துப் பார்....

காதலித்துப் பார்
கவிதை வருமென்றார்கள்
கவிஞனை காதலித்து
கவிதையானேன்..


கணவில் முகம் தெரியா
இளவரசன் செய்த லீலைகள்
நிஜத்தில் நீ செய்தபோது- என்
மன்னனாய் உனைக் கண்டேன்


மாலை மயக்கத்தில்
மன்னனின் மார்பில்
மலரும் மலராய் நான்...
மலரச் செய்தது நீ

உன் மார்பில்
என் நகக்கோலம்..
நகைப்பில் நாம்
நடுக்கத்தில் நம் தேகம்...


கண்களாலே கற்பை
சூரையாடிவிட்டு
ஒன்றும் அறியா சிறுவன் போல்
எப்படியடா உன்னால் மட்டும்
பாசாங்கு செய்ய முடிகிறது?


எங்கிருந்து ஆரம்பித்தாலும்
கடைசியாக என்
இதழ்களில் தான் முடிகிறது
உன் முத்தங்கள்..
ஏன் மீண்டும் நான்
ஆரம்பிப்பதற்காகவா??


எல்லா கவிதையும்
கறபனை மட்டுமே என்றிருந்தேன்..
என்னை கவிதையாக்கி
கவிஞன் நீ ரசிக்கும்வரை...

Friday, February 29, 2008

நினைவெல்லாம் நிறைந்து....

தொலைதூர பிரிவிலும்
தொல்லைக்கொடுக்கும்
உன் நினைவுகள்
நன்றாகத்தான் இருக்கின்றன.


உன் மீசை
குத்திய தடங்கள்
உன் இதழ்
பதித்த ஈரம்
உன் பற்கள்
செய்த காயங்கள்
இன்னும் ஆராமல்
மேலும் உன்னால் காயப்பட
காத்திருக்கின்றன...


உன் சுகமான
சுமையைவிட
உன் நினைவுகளின்
சுமைகள்
கனமாக இருக்கின்றன...


பேசாமல் கோபித்துக்கொண்ட
கணங்கள்
உன் குறும்புகளை ரசித்த
வெட்கங்கள்
பிரிவின் கணத்தை
ரணமாக்குகிறது..


அழகாய் இருப்பதாக
பொய் சொன்னேன் என
நீ வம்பிழுக்க...
உன்னிடம் யுத்தம் செய்யும் என்
உதடுகள்!!


ஊடலில் தான் நம்
தேடல் அதிகரித்தது.
நிறைவாகும் வரை தேடல்
தந்த வெப்பம் இன்றும்
தகிக்க வைக்கிறது...