சமயலறையில் நான்...
நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,
'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...
ச்மைத்[ந்]தது' நான்..
'விருந்து' நம்மிருவருக்கும்!!
நிலவொளியில்
மொட்டை மாடியில்
முழுவதுமாய் உன் பிடியில்
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்...
நிலவும் வெட்கத்தில்
மேகத்திற்குள் மறைந்துக்கொண்டது!!
நீ
டீஷர்ட் போட்டால்
ஜீன்ஸ் போடு,
ஜீன்ஸ் போட்டால்,
ஷு போட மறக்காதே...
நான்
சொன்னபடியெல்லாம் கேட்டாய்,
துப்பட்டா விலக்காதே,
இடுப்பில் கிள்ளாதே,
கேசம் கலைக்காதே...
என சொன்னால் மட்டும்
ஏன்டா கேட்க மறுக்கிறாய்????
'கள்ளி உன்னை
கிள்ள வேண்டும்போல்' இருக்கிறது என்றாய்,
'கண்ணா உன்னை
கடிக்க வேண்டும்போல் 'இருக்கிறது என்றேன் பதிலாய்,
கிள்ளுகளும், செல்ல கடிகளும்
காதலோடு காதலாகி
கலக்க வைத்தது நம்மை
கலந்தோம் ஒன்றாக
களைத்தோம் 'வெற்றி'யோடு!!!
Thursday, April 10, 2008
Monday, April 7, 2008
தொடக்கமான முடிவு....நீ
என்னை...
மீட்டெடுத்ததும் நீ
கட்டுபடுத்துவதும் நீ...
கண்டிக்கலாம் நீ
காயப்படுத்தலாமா நீ...
விருப்பம் காட்டியது நீ
விஷம் கக்கியதும் நீ....
நெருக்கமான அணல் மூட்டியதும் நீ
நெருப்பு வார்த்தை கொட்டியதும் நீ....
என் முகம் ஏந்தியது நீ
என்னை முழுவதுமாய் எரித்ததும் நீ...
வாழ வழிகாட்டியது நீ
வாழ்வை வெறுக்க வைத்ததும் நீ...
மீட்டெடுத்ததும் நீ
கட்டுபடுத்துவதும் நீ...
கண்டிக்கலாம் நீ
காயப்படுத்தலாமா நீ...
விருப்பம் காட்டியது நீ
விஷம் கக்கியதும் நீ....
நெருக்கமான அணல் மூட்டியதும் நீ
நெருப்பு வார்த்தை கொட்டியதும் நீ....
என் முகம் ஏந்தியது நீ
என்னை முழுவதுமாய் எரித்ததும் நீ...
வாழ வழிகாட்டியது நீ
வாழ்வை வெறுக்க வைத்ததும் நீ...
Saturday, April 5, 2008
இதயத்தின் கதறல்....
கடல் தாண்டி போனவள்
கன்னியம் இழந்துவிட்டாளென
எண்ணிவிட்டாயோ??
காற்றாய் உன்னை சுவாசித்தவள்
பேச்சிலும் மூச்சிலும்
உன் நினைவை
சுமந்தவள்....
சுமையாகி போனாளோ????
மனமென்னும் கற்பத்தில்
கருவாய் உன்னை
சுமந்தவளின் உயிரை
கடும் வார்த்தைகளால்
கொல்வது ஏனடா???
சேயை இழந்த தாயாய்
தந்தையை இழந்த மகளாய்
இன்று
துடிக்கிறதே என் இதயம்...
கண்ணீரெனும் மருந்திட்டு ஆற்றிட
கரமொன்றும் இல்லையா??
நியாயமா நீ செய்தது
சிந்தித்துப் பார்
என் இரத்த துளிகளின்
கதறலுக்கு
பதிலேது????
கன்னியம் இழந்துவிட்டாளென
எண்ணிவிட்டாயோ??
காற்றாய் உன்னை சுவாசித்தவள்
பேச்சிலும் மூச்சிலும்
உன் நினைவை
சுமந்தவள்....
சுமையாகி போனாளோ????
மனமென்னும் கற்பத்தில்
கருவாய் உன்னை
சுமந்தவளின் உயிரை
கடும் வார்த்தைகளால்
கொல்வது ஏனடா???
சேயை இழந்த தாயாய்
தந்தையை இழந்த மகளாய்
இன்று
துடிக்கிறதே என் இதயம்...
கண்ணீரெனும் மருந்திட்டு ஆற்றிட
கரமொன்றும் இல்லையா??
நியாயமா நீ செய்தது
சிந்தித்துப் பார்
என் இரத்த துளிகளின்
கதறலுக்கு
பதிலேது????
Friday, April 4, 2008
நினைவிருக்கும்வரை.....நிறைந்திருக்கும்!!!
என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்கும்!!
பாடாத ராகம் ஆனேன்,
எரியாத தீபம் ஆனேன்,
விடியாத இரவானேன்,
முடியாத கதையானேன்...
என் நிலையை எனக்குணர்த்தி
தன் நிலைக்கு எடுத்துச் சென்றாய்!!
மீட்டாத வீணை ஆனேன்,
எழுதாத கவி ஆனேன்,
இனிப்பில்லா தேன் ஆனேன்,
நிறமில்லா மலர் ஆனேன்....
புதுமை வழியில்
புது தென்றலாய் வீசினாய் என்னில்!!!
நீயும்
உன் அன்பும்
நம் காதலும்.....
என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்கும்!!
என் சிந்தையிலே உறைந்திருக்கும்!!
பாடாத ராகம் ஆனேன்,
எரியாத தீபம் ஆனேன்,
விடியாத இரவானேன்,
முடியாத கதையானேன்...
என் நிலையை எனக்குணர்த்தி
தன் நிலைக்கு எடுத்துச் சென்றாய்!!
மீட்டாத வீணை ஆனேன்,
எழுதாத கவி ஆனேன்,
இனிப்பில்லா தேன் ஆனேன்,
நிறமில்லா மலர் ஆனேன்....
புதுமை வழியில்
புது தென்றலாய் வீசினாய் என்னில்!!!
நீயும்
உன் அன்பும்
நம் காதலும்.....
என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்கும்!!
Thursday, April 3, 2008
நீ பிறந்தது எனற்காக....!!
நோட்டுப்புத்தகத்தையும்...
எழுதுகோலையும்...
திறந்தே வைத்திருக்கிறேன்!
உன் பிறந்தநாள் கவிதைக்காக..
மையும் மனசும்...
கொட்டுவதற்குக் காத்திருக்கிறது...
ஆனால் தெரியவில்லை
எதிலிருந்து ஆரம்பிப்பது?
இமைகளிலிருந்து ஆரம்பிக்கவா...?
இதயத்திலிருந்து ஆரம்பிக்கவா...?
அடிக்கவரும்
அப்பாவிடமிருந்து தப்பித்து..
அம்மாவின் முந்தானைக்குள்
ஒளிந்துகொள்ளும் குழந்தைகளைப்போலவே..
உன் அன்பில்
ஒளிந்துகொண்டு எழுதட்டுமா..?
சோகத்தில் மடியில்
சுருண்டு படுத்திருக்கும்போது...
தலைகோதி விடும்
தாயைப்போலவே..
என்
இதயம் கோதி விடுகின்ற உன்
விமர்சனங்களிலிருந்து சில
வார்த்தைகள் திருடட்டுமா..?
என்ன எழுதுவது..?
ஒரு கவிதை..
வார்த்தைகள் வரவில்லை..
எழுத்துக்கள் எழவில்லை..
ஏன்? ஏன்? ஏன்?
கவிஞருக்குப் போய்
கவிதை எழுதுவதா..?
நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் !!
எழுதுகோலையும்...
திறந்தே வைத்திருக்கிறேன்!
உன் பிறந்தநாள் கவிதைக்காக..
மையும் மனசும்...
கொட்டுவதற்குக் காத்திருக்கிறது...
ஆனால் தெரியவில்லை
எதிலிருந்து ஆரம்பிப்பது?
இமைகளிலிருந்து ஆரம்பிக்கவா...?
இதயத்திலிருந்து ஆரம்பிக்கவா...?
அடிக்கவரும்
அப்பாவிடமிருந்து தப்பித்து..
அம்மாவின் முந்தானைக்குள்
ஒளிந்துகொள்ளும் குழந்தைகளைப்போலவே..
உன் அன்பில்
ஒளிந்துகொண்டு எழுதட்டுமா..?
சோகத்தில் மடியில்
சுருண்டு படுத்திருக்கும்போது...
தலைகோதி விடும்
தாயைப்போலவே..
என்
இதயம் கோதி விடுகின்ற உன்
விமர்சனங்களிலிருந்து சில
வார்த்தைகள் திருடட்டுமா..?
என்ன எழுதுவது..?
ஒரு கவிதை..
வார்த்தைகள் வரவில்லை..
எழுத்துக்கள் எழவில்லை..
ஏன்? ஏன்? ஏன்?
கவிஞருக்குப் போய்
கவிதை எழுதுவதா..?
நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் !!
Subscribe to:
Posts (Atom)