Thursday, July 10, 2008

நீயே என் கவிதை....

உன் கவிதைகளை நான்
எடுத்து சேகரித்தபோதுதான்
தெரிந்து கொண்டேன்
ஒவ்வொரு கவிதையிலும்
நானிருக்கிறேன் என்ற உண்மையை

உன் காதல் கவிப் புத்தகத்தை
என் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டேன்
என் நெஞ்சின் நேசம்
உன் கவிதைகளுக்காவது
புரியட்டுமென்று..


என்னை கவிதை
எழுத வைத்தது மட்டுமல்ல
கவிதையாய்
என்னை அழகாக்கியதும்
நீதான்..

என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்க்கு
காட்டிக் கொடுக்கிறது
உன்னை நான் கவிதையாய்
காதலிப்பதை

எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்...நான்
வெக்கப்பட்டு கவிதைகளை
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்

என்னவனே!
எப்படி என் கவிதைக்குள்
ஏதேனும்
ஒரு வார்த்தையின் வடிவில்
ரகசியமாய் வந்தமர
கற்றுக் கொண்டாய்?


உன்னைத் தவிர
எனக்கு எதுவும்
தெரிவதில்லை
இரு வரியானலும்
அதன் கரு நீயாக
இருக்கும் என் கவிதைபோல

வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக...