Thursday, July 10, 2008

நீயே என் கவிதை....

உன் கவிதைகளை நான்
எடுத்து சேகரித்தபோதுதான்
தெரிந்து கொண்டேன்
ஒவ்வொரு கவிதையிலும்
நானிருக்கிறேன் என்ற உண்மையை

உன் காதல் கவிப் புத்தகத்தை
என் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டேன்
என் நெஞ்சின் நேசம்
உன் கவிதைகளுக்காவது
புரியட்டுமென்று..


என்னை கவிதை
எழுத வைத்தது மட்டுமல்ல
கவிதையாய்
என்னை அழகாக்கியதும்
நீதான்..

என் கற்பனைகள்தான்
அதிகமாய் வாசகர்களுக்க்கு
காட்டிக் கொடுக்கிறது
உன்னை நான் கவிதையாய்
காதலிப்பதை

எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்...நான்
வெக்கப்பட்டு கவிதைகளை
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்

என்னவனே!
எப்படி என் கவிதைக்குள்
ஏதேனும்
ஒரு வார்த்தையின் வடிவில்
ரகசியமாய் வந்தமர
கற்றுக் கொண்டாய்?


உன்னைத் தவிர
எனக்கு எதுவும்
தெரிவதில்லை
இரு வரியானலும்
அதன் கரு நீயாக
இருக்கும் என் கவிதைபோல

வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக...

16 comments:

said...

அட அதற்குள் மலர்ந்து விட்டதா பூக்கள் இங்கே..?? :)))

said...

//உன் காதல் கவிப் புத்தகத்தை
என் நெஞ்சோடு அணைத்துக்
கொண்டேன்
என் நெஞ்சின் நேசம்
உன் கவிதைகளுக்காவது
புரியட்டுமென்று..//

அழகு... உணர்ந்தேன்.... :)))

said...

//எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்...நான்
வெக்கப்பட்டு கவிதைகளை
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன் //

ம்ம்ம்.... அப்படியா ஜெனி..? :))))

மிக ரசித்தேன்...

said...

//வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக...//

அழகான உவமை... உவமேயம்...

வரிகள் வசீகரிக்கின்ற‌ன ஜெனி.... :)))

said...

//வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக...
//

உங்கள் கவிதை எனும் வானவில்லை தரிசிக்க வானமாய் காத்திருக்கிறோம்.

அது வானிவில்லாய் எப்பொழுதாவது வந்தால்தான் நன்றாக இருக்கும் போல.

நீண்ட இடைவெளிக்குப் பின் அருமையான கவிதைகள்
இரு பதிவுகளையும் படித்தேன், ரசித்தேன்.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள்.

said...

நவீன் ப்ரகாஷ்

அழகான உங்கள் ரசிப்பிற்கு நன்றி.

said...

புகழன்

நீண்ட இடைவெளிக்குப் பின் கவிபதித்தாலும்,நீங்கள் வருகைபுரிந்து ஊக்கமளிப்பது உவகை அளித்தது,நன்றி.

said...

wow!

said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு ;))

\\வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக...\\

சூப்பர் வரிகள் ;))

said...

Natty said...
wow!

THANKS

said...

கோபிநாத் said...
கவிதை ரொம்ப நல்லாருக்கு ;))

\\வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக...\\

சூப்பர் வரிகள் ;))\\


Thanks

said...

//வானவில்லாய் நீ
வந்து போனாலும்
வானமாய் காத்திருக்கும்
என் கவிதைகள் எப்போதும்
உனக்காக...//

வரிகள் அருமை!!

said...

Sathish

நன்றி.

said...

நல்லா இருக்கு அக்கா... தூள் கிளப்புங்க..

//என்னவனே!
எப்படி என் கவிதைக்குள்
ஏதேனும்
ஒரு வார்த்தையின் வடிவில்
ரகசியமாய் வந்தமர
கற்றுக் கொண்டாய்?//

சூப்பர்ர்... நான் ரசித்த வரிகள்.

Anonymous said...

நன்றி தமிழ்மாங்கனி.

said...

//எல்லாரும் வெக்கப்பட
கவிதை எழுதுவார்கள்...நான்
வெக்கப்பட்டு கவிதைகளை
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்//

கலக்கல் வரிகள் ஜெனிஃபர்... :))) அடுத்த படைப்பு எப்போ??