Friday, April 4, 2008

நினைவிருக்கும்வரை.....நிறைந்திருக்கும்!!!

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்கும்!!

பாடாத ராகம் ஆனேன்,
எரியாத தீபம் ஆனேன்,
விடியாத இரவானேன்,
முடியாத கதையானேன்...

என் நிலையை எனக்குணர்த்தி
தன் நிலைக்கு எடுத்துச் சென்றாய்!!

மீட்டாத வீணை ஆனேன்,
எழுதாத கவி ஆனேன்,
இனிப்பில்லா தேன் ஆனேன்,
நிறமில்லா மலர் ஆனேன்....

புதுமை வழியில்
புது தென்றலாய் வீசினாய் என்னில்!!!

நீயும்
உன் அன்பும்
நம் காதலும்.....

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்கும்!!

3 comments:

said...

அடுக்கு வரிகளாய் கவிதை அழகு :))

said...

என்னஆச்சு ஜெனி ???
இவ்வளவு சோகம்...??

said...

//மீட்டாத வீணை ஆனேன்,
எழுதாத கவி ஆனேன்,
இனிப்பில்லா தேன் ஆனேன்,
நிறமில்லா மலர் ஆனேன்....//

உணர்த்தும் வரிகள்... வலிகள்...